Claim : இஸ்ரோ-வின் சந்திரயான்-3 லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 சந்திரனில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, பிரக்யானின் சக்கரத்தில் இருந்து தேசிய முத்திரை நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டது என்று ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பல பிரபலங்களும் பகிர்ந்தனர்.
நிலவில் முத்திரை பதிக்கும் பாரதம்...
சந்திரயான் லேன்டரில் இருந்து கீழே இறங்கும் ரோவரில் அதாவது பிரக்யானில் வீல் பகுதியில் இந்த அச்சு இருக்கும்..
உண்மை என்ன: சந்திரயான்-3 ஆகஸ்ட் 14, 2023 அன்று விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவருடன் ஏவப்பட்டது. சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சேனல்களில் நிலவின் பல காட்சிகளை பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, பிரக்யானின் சக்கரத்தில் இருந்து தேசிய முத்திரை நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டது என்று ஒரு படம் வைரலானது. ஆனால், இப்படம் லக்னோவைச் சேர்ந்த விண்வெளி ஆர்வலர் ஒருவர் அடோப் போட்டோஷாப் பயன்படுத்தி உருவாக்கிய விளக்கப்படம் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியா டுடே இப்படத்தை முதலில் பகிர்ந்த கிரிஷன்ஷு கர்க்கை தொடர்புகொண்டு கேட்டபோது, லக்னோவைச் சேர்ந்த அவர், இஸ்ரோவின் வீடியோவால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியதாகக் கூறினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸிலும் படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது வைரலாகும் படத்தை உருவாக்க அடோப் போட்டோஷாப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
ஆனால் இதைப்பற்றி பொய்யான செய்தி பரவுவதை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
“எனது கலைப்படைப்புக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும், அதை வைரலாக்கியதற்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்! இருப்பினும், இப்படத்தை இஸ்ரோவால் பகிரப்பட்ட “உண்மையான இம்ப்ரிண்ட்ஸ்” என்று பலர் கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். சந்திரயான்-3 தரையிறக்கத்திற்கான கவுண்ட்டவுனாக சந்திரன் அச்சுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், நான் இதை பல்வேறு ஊடக சேனல்களுடன் பகிர்ந்துள்ளேன். இது தொடர்பான பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். உங்கள் உற்சாகம் ஊக்கமளிக்கிறது, மேலும் ஒவ்வொரு விருப்பத்திற்கும் பகிர்வுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உற்சாகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்போம், வரவிருக்கும் இஸ்ரோ சாதனைகளை தொடர்ந்து எதிர்நோக்குவோம்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மதிப்பீடு : எனவே, இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோவின் லோகோவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள பதிவு என்று வைரலாகும் படம் ஒரு விண்வெளி ஆர்வலரின் டிஜிட்டல் உருவாக்கம் மற்றும் பிரக்யானின் சக்கரத்தின் உண்மையான முத்திரை அல்ல என்பது தெளிவாகிறது. இது ஒரு டிஜிட்டல் உருவாக்கம். உண்மையான புகைப்படம் அல்ல. எனவே இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். உண்மையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நீங்கள் காணலாம்.