Claim: Facebook-ஐ பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கபடும் என்று சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
சேனல் 4 என்ற செய்தித்தளத்தில், வரும் திங்கள் முதல் ஃபேஸ்புக் பயன்படுத்த மாதம் £4.99 இனி வசூலிக்கப்படும் என்று செய்தி வெளியாகி இருப்பதாகவும், இதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள, இந்தச் செய்தியின் மீது உங்கள் விரலைப் பிடித்து நகலெடுத்து,
“எனது கணக்கில் ஒரு மாதத்திற்கு £4.99 வசூலிக்க Facebookக்கு நான் அனுமதி வழங்கவில்லை. எனது படங்கள் அனைத்தும் என்னுடைய சொத்துகளே தவிர முகநூலுக்கு சொந்தம் அல்ல!!!” என்று உங்கள் பக்கத்தில் பகிரவும். இது கணினியை மேம்படுத்துகிறது. குட் பை… எரிச்சலூட்டும் விளம்பரங்கள் மற்றும் புதிய மற்றும் பழைய நண்பர்களுக்கு வணக்கம்,” என்று செய்தி ஒன்று பரவிவருகிறது.
ஒரு செய்தியை எப்படி நகல் எடுத்து ப்ரோஃபைல் பக்கத்தில் ஒட்டுவது என்ற விளக்கத்துடன் இருக்கும் அந்த செய்தியில்,
“விற்பனை விளம்பரங்கள் மற்றும் குப்பைப் பொருட்களின் அளவு காரணமாக நீங்கள் FB-யில் இருந்து வெளியேற நினைத்தால் விலகவும்,” என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த மெசேஜ் உண்மை தானா என்று இணைய தளங்களில் தேடிய போது இது ஒரு வதந்தி என்பது தெரியவந்தது. மேலும், இந்த செய்தி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல வலைதளங்களில் வெவ்வேறு விதமாக பரவி வருவதும் தெரிய வந்தது. இந்த செய்தி misleading என்று பல செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மேலும், ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கு பயனர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ‘Meta Verified’ சேவையைத் தேர்ந்தெடுப்பவர்கள் மட்டுமே கூடுதல் அம்சங்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவலும் logically செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், இதே செய்தி சற்று விதியாசமாக ஃபேஸ்புக்; மாதம் $7.99 வசூலிக்கப் போவதாக சேனல் 13 செய்தி வெளியிட்டதாக சமூகஊடகங்களில் பரவியது. இது முற்றிலும் போலியான செய்தி என்று abc நியூஸ் – San Dieago வெளியிட்டுள்ளது.
மதிப்பீடு: 2004 முதல் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் ஃபேஸ்புக் சேவைக்கு தற்போது கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் செய்தி போலியானது. இந்தக் கூற்றை ஃபேஸ்புக் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், இந்த செய்தி பல ஆண்டுகளாக உண்மை என்று நம்பி பகிரப்பட்டு வருகிறது. இது ஒரு போலியான செய்தி என்று பல செய்தி ஊடகங்களும் சரிபார்த்து தங்கள் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
எனவே, இது போலியான செய்தியாகும். இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். பல வருடங்களாக பரவி வரும் இந்த போலிச் செய்தியை மேலும் பரவாமல் தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…