ரயில் விபத்துகளை தடுக்க ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறினாரா?

ரயில் விபத்துகளை தடுக்க ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறினாரா?

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது நல்லது என்று, பாஜக தலைவரும், எம்.எல்.ஏ ஆகிய வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பரவியது.

 

Claim: “இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த முடிவாகும்,” என்று பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாக News Now 4 தமிழ் என்ற தளம் செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலர் அந்த பதிவை பகிர்ந்தனர்.

மதிப்பீடு: உண்மையில் அவர் அப்படி ஒரு கருத்தை தெரிவித்தாரா என்று செய்தி தளங்கள் மற்றும் அவருடைய சமூக ஊடக தளங்களிளும் ஆராய்ந்து பார்த்த போது, வானதி ஸ்ரீனிவாசன் அப்படி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெரிந்து கொண்டோம். மேலும், அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவரே பதிவிட்டிருப்பது தெரிய வந்தது. 

 

எனவே, ரயில் விபத்துகளை தடுக்க ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறியது போன்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது. இதை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Related post

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் என்ற தலைப்புடன் ABP News செய்தி வெளியிட்டதா?

இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம்…

Claim: புடவை அணிந்த  பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *